About the author
எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, வாசிப்பை நேசித்து இருந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, அரசியல் ஆய்வு உள்ளிட்ட தளங்களில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன். தற்போது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.என் குழந்தை பருவத்திலேயே உமாபதி என எனக்கு புனை பெயர் வைத்த என் தாய்மாமா சங்கிலி அவர்களை நினைவு கூறுகின்றேன். வெறும் செய்தியாளராக இருந்த என்னை, டோரிஸ் லெஸ்சிங் வாழ்க்கை வரலாறை மொழிபெயர்பு செய்யுங்கள் என்று கூறி, என்னை எழுத்தாளராக உருவாக்கிய ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.ப.திருமாவேலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.