About the author
பரமகுரு கந்தசாமி தற்பொழுது பெங்களூரில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு நிபுணராக ( IT INFRASTRUCTURE MANAGEMENT SERVICE ANALYSTS) பணியாற்றி வருகிறார். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், தமிழ் கவிதைகள், கதைகள், தன்னம்பிக்கை தொடர், எழுதும் ஆர்வம் கொண்டவர். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பொறியாளர் பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் " மழையிடை மின்னல்கள்" எனும் கவிதை நூலை எழுதியுள்ளார்.
அமேசான் கின்டில்- லில் " இரண்டு நிமிட கதைகள்" எனும் தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் மேஜிக், GOOGLE BLOGS, மாணவர்களுக்கான தன்னம்பிக்கை சிறப்பு வகுப்புகள் போன்றவற்றை கல்லூரி மற்றும் அரசாங்க பள்ளிகளில் இலவசமாக செய்து வருகிறார்(THE MIRROR - HTTPS://THEMIRRORGROUPS.BLOGSPOT.COM). பள்ளிக் காலம் தொடங்கி கல்லூரி வரை 40க்கும் மேற்பட்ட மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றுள்ளார். கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அப்போதைய கடலூர் மாவட்ட COLLECTOR திரு.ககன்தீப்சிங்பேடி அவர்களிடம் பரிசுகளையும் பெற்றுள்ளார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பட்டிமன்றம் பேச்சுப் போட்டிகள் என பல பரிசுகள் பெற்றுள்ளார். விஜய் டிவி நடத்தும் விவாத மேடை நிகழ்ச்சியான நீயா நானாவில் பங்கேற்று இருக்கிறார்.