முனைவர்.இரா. பிரபாகரன் அவர்கள் கோவை தொழில் நுட்பக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராகவும் பணி புரிந்து வருகிறார்.
கணிதத்தினை கதைகள் மூலம் நடத்துவதில் வல்லவர்.சிறந்த இந்தியன் விருது, மனிதநேய மாமணி விருது, சுவாமி விவேகானந்தர் விருது,கவிதென்றல் என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் பல்கலைக் கழகமானியக் குழுவிடமிருந்து நிதியுதவி பெற்று கணிதவியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பண்டைய தமிழர்களின் கணித திறன்கள், இந்தியர்களின் புராணங்களில் புதைத்துள்ள கணித புதையல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் பொறியியல் கல்வி அமல்படுத்துவதில், இந்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் சார்பில் அண்ணா பல்கலை கழக பொறியியல் கணிதம் இரண்டாம் பருவத்திற்காக மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் கணித நூல்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து தமிழினை ஒரு அறிவியல் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பு இயக்கத்தினை நடத்தி வருகின்றார்.
தமிழ் வழி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதவியல் கருத்துக்களை கொண்டுசேர்க்கும் பொருட்டு கணிதவாணி என்னும் மாத இதழினை நடத்திவருகிறார்.