Karaikudi Narayanan
About the Author
ஊர்பெயரை தன்னுடன் இனைத்து ஊருக்கும் பெருமை சேர்த்தவர். திரையுலகின் ஜாம்பவான்களான திரு.பீம்சிங் அவர்களிடம் 1967 ல் திரு.ஜெமினிகணேசன், P.பானுமதிம்மா, நடித்த பட்டத்துராணி என்ற பட்த்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர், திரு.ஜாவர் சீதாராமன் அவர்களிடம் உதவி எழுத்தாளராக பணிபுரிந்தவயர்.
திரு.A.C.திருலோகசந்தர் அவர்களால் 1971 ல் திரு.முத்துர்மன், K.R.விஜயா, பிரமீளா, சொந்தம் திரைப்படம் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகி நமக்கு சொந்தமானவர். 1977 அச்சாணி என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். திரு.முத்துராமன், திருமதி.லட்சுமி, ஷோபா அறிமுகம்.
AVM ன் செல்லப்பிள்ளை... இன்று பேர் சொல்லும் பிள்ளை...
திரு.மேஜர் சுந்தர்ராஜன் திரு.சிவக்குமார் திரு.ஶ்ரீகாந்த் திரு.ரவிச்சந்திரன் திரு.விஜயகுமார் திருமதி.மஞ்சளா திருமதி.பிரமீளா ஆகியோருக்காக 28 மேடை நாடகங்களை எழுதி அரங்கேற்றியவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என்று அனைத்து மொழிகளிலும் 29 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 9 படங்களை தயாரித்து, இயக்கியவர்.
இவரிடம் இருந்த உதவியாளர்கள் இயக்குநர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர்களாக, திரையுலகில் வெற்றி பெற்றவர்கள்... திரு.ராஜசேகர் திரு.இராமநாராயணன் திரு.M.A. காஜா, திரு.ராமராஜன் திரு.ரமேஷ்கண்ணா திரு.கஜேந்திரகுமார் திரு.எழுச்சூர் அரவிந்தன் ஆகியோர்.
தமிழக அரசின், கேரள அரசின், மாநில விருதுகளைப் பெற்றவர். மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றவர்.
இன்றும் SWAN ல் கதைகளை பதிவுசெய்து வருபவர். SWAN ல் துணைத்தலைவராக பொறுப்பு வகித்த சாதனையாளர், முன்னோடி, திரைப்பட எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நல்ல மனிதர், மரியாதைக்குரிய திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நீண்ட ஆயூளுடன், நல்ல ஆரோக்யத்துடன், பல்லாண்டுகள் வாழ, குடும்பத்தில் பெரியவர்களை வணங்கிப் போற்றுவது போல், திரைக்குடும்பத்தில் இவரைப் போன்ற முன்னோடிகளை வணங்கிப் போற்றி பிராத்திப்போம்...
சி.ரங்கநாதன்.