Kavipithan
About the Author
வேலூர் மாவட்டத்தின் நீவா நதிக்கரை கிராமமான வசூர் என்கிற சிற்றூரில் பிறந்தவர், நீவா நதியின் இன்றைய பெயர் பொன்னையாறு. இது பாலாற்றின் துணை ஆறு. விலங்கியலில் இளம் அறிவியல் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மக்கள் புது முரசு என்கிற உள்ளூர் செய்தித் தாளை சுமார் பதினைந்து ஆண்டுகள் நடத்தி வந்தவர்.
தற்போது வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியராக வேலூர் மாவட்டத்தில் பணிபுரிகிறார். இது வரை இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.