La.Sa.Ra. Saptharishi
About the Author
'நிறைய படி. எதைவேணுமானாலும் படி, ஆனால் படித்துக்கொண்டே இரு. தன்னாலேயே தேவையில்லாத தெல்லாம் உதிர்ந்துபோய் என்ன வேணுமோ அதை மட்டுமே படிப்பாய்' என்பார் என் தந்தையார். படித்தேன். படித்துக் கொண்டேயிருந்தேன். சொன்னது நடந்தது சொல்லாததும் நடந்து - நான் எழுத்தாளனாகி விட்டேன்.
முதல்கதை 'பாப்பா' அஸ்வினி இதழில் வெளிவந்தது. அமுதசுரபி, விகடன், குமுதம், தினமணிக்கதிர், சாவி, இதயம் பேசுகிறது, தாய் போன்ற எல்லா முன்னணி இதழ்களிலும் வெளிவந்திருக்கிறது - 84ல் எழுதுவது நின்றுபோனது. 23 வருடங்களுக்குப்பிறகு 2008ல் எழுதிய 'பாசம் ஒரு பாவ நதி' கதைக்கு இலக்கிய சிந்தனை பரிசு கிடைத்தது. கவிதை, பயணக்கட்டுரை, கதைகள், கேஸட் விமர்சனம், திரைப்பட விமர்சனம், புத்தக விமர்சனம், நேர்கோணல் என போய்க் கொண்டிருக்கிறது.
லா.ச.ரா போல எழுத வராவிட்டாலும், லா.ச.ராவின் மகன் என்பது ஒரு தகுதியாக இல்லாவிட்டாலும், லா.ச.ரா. போல பெயர், புகழ், விருது, அங்கீகாரம் பெறாவிட்டாலும்
- நான் -
லா.ச.ராவின்
அன்பு மகன்
- லா.ச.ரா.சப்தரிஷி