மீனாக்ஷி பாலகணேஷ் மதுரைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் 1979-ல் முனைவர் பட்டம் பெற்றவர்; 30 ஆண்டுக்காலம் விஞ்ஞானியாக மருந்து கண்டுபிடிப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வின்பின்பு தனது இரண்டாம் காதலான தமிழைப் பயின்று, பிள்ளைத்தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (2019) பெற்றுள்ளார். பிள்ளைத்தமிழ் - பன்முகப்பார்வை (ஒரு திறனாய்வு) எனும் இவரது ஆய்வுநூல் சைவசித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
மங்கையர் மலர், தீபம், (கல்கி குழுமம்), கலைமகள், மஞ்சரி, தினமணி, ஓம்சக்தி, சிவசுந்தரி ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும், சொல்வனம், வல்லமை, பதாகை, குவிகம், தமிழ் ஹிந்து, தாரகை, ஆகிய இணையதளங்களில் இலக்கியக்கட்டுரைகளும், தொடர்களும் அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். பிரதிலிபி இணையதளம் இவருடைய 'கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்' எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், 'இனி என்னைப் புதிய உயிராக்கி' எனும் புதினம், தாகூரின் 'சண்டாளிகா', 'சித்ரா' எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, டால்ஸ்டாயின் 'காகசஸ் மலைக்கைதி' எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது.
சித்ரா எனும் மொழிபெயர்ப்பு நாவல் பிரதிலிபியின் மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்றது.பெங்களூரில் கணவருடன் வாழும் மீனாக்ஷி பாலகணேஷ், தமிழிலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தீபம் (கல்கி குழுமம்), மங்கையர் மலர், கலைமகள், மஞ்சரி, ஓம்சக்தி ஆகிய தமிழ் இலக்கிய இதழ்களிலும், பல தமிழ் இணையத் தளங்களிலும் இலக்கியம், ஆன்மீகம், விஞ்ஞானம் சார்ந்த கட்டுரைகள், கதைகள் எழுதி வருகிறார். இவருடைய 'கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்' எனும் தொடரும், இன்னும் சில மொழிபெயர்ப்பு நூல்களும் பிரதிலிபி இணையதளத்தில் மின் நூலாக வெளியிடப்பட்டுள்ளன.