Rasavadhi
About the Author
ரஸமாக எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கக்கூடியவர் என்ற பொருளில் 'ரஸவாதி' என்ற புனைபெயர் வைத்துக் கொண்டதாகக் கூறுவார். 1950 களிலிருந்த சிறந்த இலக்கிய மாதப் பத்திரிகைகளான 'அமுதசுரபி' நாவல் போட்டி பரிசும் (அழகின் யாத்திரை) 'கலைமகள்' நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டி (ஆதாரஸ்ருதி) பரிசும் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. ஆனந்த விகடனில் பல முத்திரை சிறுகதைகள் வெளியாகி உள்ளன. பல மேடை நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார். திரு வி.ஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு எழுதிய 'வழி நடுவில்' நாடகம் மதராஸ் மாநிலத்தின் இயல் இசை நாடக மன்றத்தின் பரிசினை வென்றது.
இவருடைய ஒரு சிறுகதை 'உயிர்' என்ற பெயரில் சினிமாவானது. தயாரிப்பாளர் பி.ஆர்.சோமுவிடம் உதவி இயக்குனராக 'எங்கள் குல தெய்வம்; என்ற படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.