ம. இராசேந்திரன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர். கணையாழி இதழின் வெளியீட்டாளர். கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர்.
இவர் மெக்கன்சியின் சுவடிகளில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.
ம. இராசேந்திரன் தமிழ்நாடு அரசில் பல பொறுப்புகளை வகித்துள்ளார் - குறள் பீடம் பொறுப்பாளர், மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகப் பணி, தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புத்தகைமை விரிவுரையாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுப்பணி தனிஅலுவலர், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் அகரமுதலித் திட்டப் பொறுப்பு இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் திராவிட மொழியியல் பள்ளி, திருவனந்தபுரம், இயக்குநர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.
இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
Rent Now Shanmugam chettiar
Is there any provision for sample reading?