Aathichoodi Nadagangal (ஆத்திச்சூடி நாடகங்கள்)
About Aathichoodi Nadagangal :
ஔவையின் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆத்திசூடி கதைகள், ஆத்திசூடி பாடல்கள், ஆத்திசூடி கட்டுரைகள் என்று பல பரிணாமங்களில் பல நூல்கள் வெளிவந்துள்ளதைப் போன்று ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு நாடக வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதே இந்த ‘ஆத்திசூடி நாடகங்கள்' என்ற இந்நூல். இதன் ஆசிரியர் திரு. அவர்கள்.
அறம் செய விரும்பு' முதல் 'அஃகஞ் சுருக்கேல்' வரை உள்ள பதிமூன்று ஆத்திசூடிகளுக்கும் பதிமூன்று நாடகங்களை உருவாக்கி உள்ளார் இந்நூலாசிரியர். நாடகங்கள் ஒவ்வொன்றும் சிறுவர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய மாணவ சமூகத்தினர் படித்து பயனையும், பண்பையும் பெறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாடகத்தையும் அதன் கதாபாத்திரங்களையும், கதை களத்தையும் ஆத்திசூடி பாடல் கருத்துக்கு ஏற்றாற்போல் திறம்பட வடிவமைத்துள்ள இந்நூலாசிரியரின் போக்கு போற்றுதற்குரியது. அனைவரும் இந்நூலினை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
நன்றி!
About Kalaimamani Kovai Anuradha :
கோவை அனுராதா சிறந்த நகைச்சுவை நாடகங்கள் எழுதி நடித்தவர். தொலைக்காட்சியில் இவர் நடித்த நாடகங்கள் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தன. இவர் தமிழகத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர். இவர் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
1. பொதுநலம் பொன்னுச்சாமி
2. சிந்திக்க வைக்கும் சிரிப்பு நாடகங்கள்
3. சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை நாடகங்கள்
4. நடிகையின் மனைவி
போன்ற பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
உயர்ந்த கருத்துடன் சிரித்து, சிந்திக்கத்தக்க வகையில் இவர் எழுதிய நூல்கள் அமைந்துள்ளன. அனைவரும் படித்துப் பயன்பெறத்தக்க உயரிய நூல்களை எழுதிய கோவை அனுராதா அவர்கள் மேலும் மேலும் பல நூல்கள் படைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
Rent Now