ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் அந்த வீட்டின் மகாலட்சுமியாக கருதப்படுகிறாள். அப்படி வரும் மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தக்கூடாது
வரதட்சணை பெறுவதால் புகுந்த வீட்டு உறவுகள் மீது அப்பெண்ணுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
பிள்ளைகளை காயப்படுத்தாத தந்தை...
மாமியாருக்கு பணத்தின் அருமையை புரிய வைத்த மருமகள் கைபிடித்தவளை விட்டுக்கொடுக்காத கணவன் என பல கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக இக்கதையில் வாழ்ந்துள்ளார்கள்.
குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற எனது நாவல் உங்கள் மனதில் மலர்ந்து மணம் வீசட்டும்.
- பரிமளா ராஜேந்திரன்
அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..
எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.
இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.
பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.
150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.
Rent Now