நான்கு போர்ஷன்கள் கொண்ட அந்தக் குடியிருப்பில் வாழும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தேவநாதன், தன் மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்க படாதபாடு படுகிறார். அந்தக் குடியிருப்பின் உரிமையாளரான சம்பூர்ணம் மிகவும் கண்டிப்பான, வாய்த்துடுக்கான பெண்மணி. சிறிதும் லஜ்ஜையில்லாமல் குடியிருப்பவர்களை தெருவில் நின்று கொண்டு கத்திக் கத்தி திட்டுவாள். எல்லோரும் அதை பொறுத்துக் கொண்டாலும், தேவநாதனின் இளைய மகள் அர்ச்சனா பொறுக்க முடியாமல் அடிக்கடி அந்தப் பெண்மணியுடம் சண்டையிடுவாள்.
ஒரு நாள் மூத்த பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கும் போது, இவர்கள் அழைக்காமலே அந்த சம்பூர்ணம் வீட்டிற்குள் வந்து அமர்கிறாள்.
அவளிடமிருந்து பூகம்பத்தை எதிர்பார்த்தவர்கள் அவளது மாபெரும் தியாகத்தைத் தெரிந்து கொண்ட பின் அவளுக்கு நன்றி செலுத்தினர்.
அந்த சம்பூர்ணத்திடம் அடிக்கடி சண்டை போடும் அர்ச்சனாவும் மனம் மாறி, அந்தப் பெண்மணியின் ஊனமுற்ற மகனைத் திருமணம் செய்கிறாள்.
சக மனித உறவுகளைப் பற்றி மேன்மையோடு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் பெண் வாசகர்களை நிச்சயம் கவரும், என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now