வெளிநாட்டுப் பயணங்களையும், அங்கு கண்ட புதிய மண்ணையும், அதில் வாழும் அல்லது வாடும் ஈழத்தமிழர்களின் அவலங்களையும் கதைகளாக்கியுள்ளார். எல்லாவற்றிலும் நிஜம் நெருப்பாகச் சுடுகிறது. இப்பதினான்கு சிறுகதைகளில் பல பத்திரிகைகளில் வெளிவந்தவை; சில இதற்காகவே எழுதப்பட்டவை.
எழுத்து என்பது சுயப்பிரதாபமோ சுத்தமான உத்திகளின் வடிகட்டல்களோ அல்ல. அது மனித உறவுக்கான மந்திர வலை. இவ்வலை பின்னும் நூற்றுக்கணக்கான படைப்பாளிகளுள் சுப்ரபாரதி மணியனும் ஒருவர்.
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட மொத்தம் 52 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 31 ஆண்டுகளாக வெளிவருகிறது. திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.
Rent Now