தன் வீட்டு வேலைக்காரியான சாய்ராபானு வேறு மதத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவளை வேலையிலிருந்து துரத்தி விடும்படி மனைவியிடம் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார் நாராயணசாமி. “நம்ம வீடு இருப்பது புறநகர்ப் பகுதி…இந்த ஏரியாவுக்கு வர எந்த வேலைக்காரியும் சம்மதிப்பதில்லை…அதனால இவளைத் துரத்த முடியாது” என்று தீர்மானமாய் மனைவி சொல்லிவிட, அந்த வேலைக்காரி மீதும் அவளுடன் வரும் அவள் மகள் சிறுமி ஷெரீன் மீது அளவு கடந்த கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவார் நாராயணசாமி. தங்கள் மகள் குழந்தை காயத்ரி அந்த வேலைக்காரி மகளோடு விளையாடுவதையே தடை செய்தவர் அவர். ஒரு முறை காயத்ரி காணாமல் போகிறார். இரவு வரை அவள் வராமல் போக பதட்டமாகிறார். சற்றுத் தொலைவிலுள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றிற்குள் அவள் விழுந்து விட்ட தகவல் கிடைத்ததும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பேரிடர் மீட்புக்குழு ஆட்களையும், ராட்சத எந்திரங்களையும் வரவழைத்து, இரவு முழுவதும் படாதபாடு பட்டு குழந்தையை அதிகாலை வேளையில் வெளிக் கொணர,
அக்குழந்தை வேலைக்காரியின் மகள் ஷெரீன்.
அப்படியென்றால்…..காயத்ரி எங்கே?
கதையை முழுவதும் படியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now