பணம் மட்டுமே முக்கியமென்று நினைக்கும் ஒரு முரட்டுக் காளைக்கும், அன்புக்கும் மனிதாபிமானத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாயகிக்கும் நடுவே தோன்றும் மோதல் எப்படி காதலாய் மாறுகிறது என்பதே கதை. கதிரவனாய் சுட்டெரித்தவன் உருகும் பனித்துளியாய் மாறிப் போன காரணம் என்ன... அழகான காதலை சொல்லும் கதை பிரம்மனின் பனித்துளி...
நான் லதா பைஜூ... கேரளம் தாய்வீடு என்றாலும் படித்து வளர்ந்தது தமிழ்த்தாயின் மடியில்... சிறுவயது முதலே வாசிப்பின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவள். தமிழ் மீதிருந்த விருப்பத்தால் நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறேன்... நாவல் வாசிப்பின் மீதிருந்த ஆர்வம் எழுதுவதிலும் தோன்ற (2014) முதல் ஆறு ஆண்டுகளாக கதைகள் எழுதி வருகிறேன். நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நன்மையைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை உள்ளவள் என்பதால் அதன் அடிப்படையிலேயே எனது கதைகள் அமைந்திருக்கும். இதுவரை 19 நெடுநாவல்கள், 5 குறுநாவல்கள், 5 சிறுவர் நூல்கள் எழுதியிருக்கிறேன்...
புத்தகமாக உருவெடுத்த என் கதைகள் இப்போது புஸ்தகாவுடன் இணைந்து, மின்நூல் வடிவில் உங்களைத் தேடி வரப் போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... புஸ்தகாவுடனான இந்தப் பயணம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்... எனது கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், நிறை குறைகளையும் எனது lathabaiju123@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கிறேன்...
Rent Now