எழுத்துலகில் ‘லா. ச. ரா' என்ற மூன்று எழுத்துக்களுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு.
உலகில் பிரம்மா படைக்கும் பாத்திரங்கள் வெறும் செய்திகளைத்தான் உண்டாக்குகின்றன. இந்த எழுத்துலக பிரம்மாவின் படைப்புக்களோ. அழியாத இலக்கியத்தையல்லவா தோற்றுவிக்கின்றன.
சில பாத்திரங்களின் பேச்சில் இந்த உண்மையைப் பார்க்கலாம்.
நீ கண்டது கனவில்லை; உன் கற்பனையின் சத்தியம்!
இதில் பொன்னைத்தானா உரைக்கரோம்?
ஆளையே உரைக்கரோம்!
யுத்தம் தந்த பரிசா ஒரு வெள்ளைத் தோல் என்னைக் கொடுத்துட்டு கப்பலும் ஏறிப் போச்சு. நான் வெங்காயத் தோலோடு பிறந்துட்டேன்.
நாமம் என்ன திவ்யமானாலும் ரூபத்துக்கு இணையாகுமா? ரூபத்தின் நிழல்களைத்தான் நாமம் தரமுடியும்.
இப்படி எத்தனையோ முத்துச் சிதறல்கள் இந்தக் கதைத் தொகுப்பில் காணலாம்,
அமைதியாகப் படிக்க, சுவைக்க, அசைபோட, மகிழ உங்களுக்கொரு நல்ல விருந்து!
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.
லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.
அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.
Rent Now