விஜயாவும், சவிதாவும் ஒரே அலுவலகத்தில் பணி புரியும் தோழிகள். அவர்களுக்கிடையே அதீத நட்பு கான்கிரீட்டின் உறுதியும், வஜ்ரத்தின் பிடிப்பும் கொண்டது.
விஜயா தனக்குக் கிடைத்த பதவி உயர்வுடன் கூடிய மாற்றலை, சவிதாவைப் பிரியக் கூடாது என்பதற்காகவே மறுக்கிறாள்.
அதே போல், தன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை ஏற்க மறுத்து துரத்துகிறாள். காரணம் கேட்ட போது, “திருமணம் செய்து கொண்டு கணவரோடு சென்று விட்டால் சவிதாவைப் பிரிய நேரிடுமே” என்கிறாள்.
விஜயாவின் வெறித்தனமான அன்பு, அவள் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும், என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட, தானே வலிய அவளைப் பிரிகிறாள்.
அந்தப் பிரிவு, என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது, என்பதை மிகவும் அற்புதமாக கதையாக்கியுள்ளார் நாவலாசிரியர். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட இக்கதையில் காதலையும் இணைத்து, கதையைச் சுவாரஸியமாக்கியுள்ளார்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now praveen kumar
varey nice