பெற்றவர்களின் பிரிவு அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளை பாதிக்கும் என்பதை கருவாக கொண்டு படைக்கப்பட்ட நாவல் தான் “என் வாழ்க்கை உன்னோடுதான்” இணைந்து வாழவேண்டிய இல்லறத்தில் ஏற்படுகிற சிக்கல்...
பெற்றவரின் அன்புக்கு ஏங்கும் மகள் அவள் மனதில் ஏற்பட்ட காதல்... குடும்ப சூழலும் காதலும் பாசமும் கதாநாயகியின் வாழ்க்கையை எந்த திசையில் கொண்டு செல்கிறது என்பதை இந்நாவல் விவரிக்கிறது காதலுடன் இணைந்த பாசம் நிச்சயம் படிப்பவர்கள் மனதில் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
- பரிமளா ராஜேந்திரன்
அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..
எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.
இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.
பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.
150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.
Rent Now