அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் முத்தையா ஒருவனே பொது வேலைக்காரன். தான் உபயோகித்த பழைய சட்டையொன்றை அவனுக்குத் தருகிறார் செல்வராஜ். ஆனால் அவன் அதை தான் அணியாமல் ஒரு ஊனமுற்ற ஏழைப் பிச்சைக்காரச் சிறுமிக்கு கொடுத்துவிடுகிறான். ஒரு கட்டத்தில் கடும் மழையால் ஒதுங்க இடமின்றி சாராயக்கடையில் ஒதுங்கிய அந்த சிறுமியையும், அவள் தாயையும் சில காமுகர்களிடமிருந்து காப்பாற்றி, அப்பார்ட்மெண்டின் பார்க்கிங் தளத்தில் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறான். அப்பார்ட்மெண்ட் வாசிகளில் சிலர் அதை அசிங்கப்படுத்த, அவர்களின் வாயை அடைக்கும் பொருட்டு அந்தச் சிறுமியின் தாயைத் திருமணம் செய்து கொள்கிறான். ஊனமுற்ற அந்தச் சிறுமிக்கு ஒரு சர்ச் பாதிரியார் கல்வி உதவி செய்ய அவள் படிப்பில் சாதிக்கிறாள். வாழ்க்கை ஏறுமுகம் காணத் துவங்குகிறது…
தொடர்ந்து நாவலைப் படியுங்கள் நற்சிந்தனைகள் வளரும்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now