சங்க காலம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் ஒன்று கூடி சங்கமித்த காலம். அந்த ஒப்பற்ற காலத்தின் விழுமிய சிறப்புகளை இன்றைக்கு நமக்கு எடுத்தோதுவதே சங்க கால இலக்கியங்கள்.
ஒருகாலத்துப் பெருமைகளும், பண்பாட்டுச் செயல்பாடுகளும் தொன்று தொட்டுத் தொடரும் செல்வங்களாய் பிற்காலத்திலும் நம் செயல்பாடுகளில் அழியாமல் பிரதிபலிக்குமா என்பது மிலியன் டாலர் கேள்வி.
இந்தத் தொகுப்பு அந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வது.
சங்ககால நிகழ்வுகளை, இக்காலத்து நிகழ்ச்சிகளோடு ஒரு கதை போலவான வடிவத்தில் ஒன்றிப் பார்ப்பதற்கான அரிய முயற்சி நூல் வடிவாகியிருக்கிறது. அந்தந்த இடங்களில் சங்க காலப் பாடல்களையும் கொண்டிருப்பது தனிச் சிறப்பு.
வாசித்துத் தான் பாருங்களேன். உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உறுதி.
ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.
ஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.
Rent Now இராய செல்லப்பா
தேர்ந்தெடுத்த பதினோரு சங்கப்பாடல்களுக்கு விளக்கம் கொடுத்துள்ள நூல். நவீன சிறுகதை மாதிரி ஆரம்பித்து இறுதியில் புறநானூறு, குறுந்தொகை போன்ற பாடல் நயத்தை வர்ணிப்பது இனிய அனுபவம். இளைஞர்கள் ரசிக்கவேண்டிய புத்தகம்.