ஒரு சாதாரண கம்பெனியில் கிளார்க் உத்தியோகம் பார்க்கும் பரந்தாமன் தரகரிடம் தனக்கொரு பெண் பார்க்கச் சொல்ல, அவரோ தரகு ஆசையில் சென்னையில் வாழும் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணான வைதேகியிடம், பரந்தாமன் ஒரு செல்வந்தர் வீட்டு ஒரே வாரிசு என்றும், பெரிய கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் என்றும் பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணத்திற்குப் பின் உண்மை தெரிந்ததும், வைதேகி அவனை விட்டுப் பிரிந்து தந்தாய் வீட்டிற்கே சென்று விடுகிறாள். அவள் பிரிவைத் தாங்க முடியாமல் வேறு ஊருக்குச் சென்று வாழ்கிறான் பரந்தாமன். அங்கே தனக்கு உதவி செய்தவரின் விதவைத் தங்கைக்கு வாழ்வு கொடுக்கிறான்.
வைதேகியும் தான் பேராசிரியராக பணி புரியும் கல்லூரியின் சக பேராசிரியர் ஒருவரைத் திருமண செய்து கொள்கிறாள்.
இரு ஜோடிகளும் தேனிலவுக்காக கொடைக்கானல் வருகின்றனர்.
வந்த இடத்தில் பரந்தாமனும் வைதேயும் ஒருவரையொருவர் பார்த்து அதிர,
பரந்தாமனின் புது மனைவியும் அதிர்கிறாள்.
காரணம்?
நாவலைப் படியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now