நான் தொடர்ந்து ‘தமிழக விவசாயி உலகம்' இதழில் எழுதி வந்த இயற்கை விவசாயக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
சுமார் 45 ஆண்டுகளாக இந்தியாவை வாழவைக்கப் போகும் ஒரே விவசாய முறை இயற்கை வழிதான் என்பதை ஆணித்தரமாக எத்தனையோ அரங்குகளிலும் - அரசினிடமும் தனிப்பட்ட வேளாண் பெருமக்களிடமும் எடுத்தியம்பி வந்துள்ளேன்.
அழுதாலும் - தொழுதாலும் அதுதான் எங்கள் தொழில் என்று இன்றளவும் சொல்லி - இயற்கை வழியில் - விவசாயத்தில் செயல்படுத்தி வரும் எண்ணற்ற வேளாண் பெருமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி - அவர்களது வெற்றியில் அடியேனும் பங்கு பெற்று ஆனந்தப்பட்டு வாழ்ந்து வருகிறேன்.
இந்த இயற்கை வழி விவசாயத்தின் மூலம் பசுமை விளைவின் பங்காளிகளாகத் திகழும் உயிர் உரங்களைப் பற்றியும், உயிரியல் இடு பொருட்கள் பற்றியும் - அவைகளைப் பயன்படுத்தி விவசாய வெற்றியாளர்களாய்த் திகழும் வேளாண் பெருமக்கள் பற்றியும் இந்த நூலில் விளக்கமாய் படிப்பவர் பயனுறும் வகையில் கூறியுள்ளேன்.
படியுங்கள் - பயன் பெறுங்கள்.
இவர் இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தனது வேளாண் கல்வியை அண்ணாமலை பல்கலைக் கழகம், கோவை, லண்டன் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போர்ட் ஆஃப் ஸ்பெயினிலும் கற்றவர். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் வந்துவிட்டார்.
சிறுவர் கதைகள், குழந்தைப் பாடல்கள், தொடர் கதைகள், நாவல்கள், வேளாண் தொழில் மற்றும் இதர நூல்கள் என்று இதுவரை 78 நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
Rent Now