துறுதுறு நாயகன் சம்பத். இடம் பொருள் ஏவல் தெரியாமல் தன் காதலை, வளர்ந்து வரும் தொழிலாதிபரான சௌபர்ணிகாவிடம் வெளிப்படுத்த, இப்படியும் ஒருவனா என்று அவள் விழிக்கிறாள். அதுவே பின்னர் காதலாகப் பற்றிக்கொள்ள, ஒரு jolly-go love story. படித்து மகிழுங்கள்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now