தீபாவும் சங்கரும் நேரில் பார்க்காமலே வாட்ஸ்அப் மூலமாக காதலை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு பெரிய நிறுவனத்தில் ஹெச்.ஆர்.மேனேஜராகப் பணி புரியும் தீபாவிடம் தானும் ஒரு பெரிய நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் என்று பொய் சொல்லியிருந்தான் சங்கர். உண்மையில் அவன் ஒரு செக்யூரிட்டி. அதிலும், கருப்பாகவும், அசிங்கத் தோற்றத்திலும் இருக்கும் அவன், யாரோ ஒரு நல்ல அழகான இளைஞனின் புகைப்படத்தை அனுப்பி, அதுதான் தான் என்று பொய் சொல்லியிருக்கிறான்.
எதிர்பாராத விதமாக அந்த போட்டோ இளைஞனை தீபா ஒருநாள் நேரில் சந்தித்து விட எல்லா உண்மைகளும் வெளி வருகின்றது.
அவள் கோபம் கொண்டாளா?...அந்த சங்கரை ஏற்றுக் கொண்டாளா?...இல்லை உதறித் தள்ளினாளா?, என்பதையெல்லாம் அதிக பட்ச திருப்பங்களுடன் அற்புதமாக கதையாக்கியுள்ளார் கதாசிரியர்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now