பெரிய செல்வந்தரான இந்திராணி அம்மாளின் மகன் நிரஞ்சன். நன்கு படித்தவன். வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு வந்தவன். அவனது நெருங்கிய நண்பன் அரவிந்தன். அவர்களிடம் வேலைக்குச் சேரும் மனஸ்வினி. வேலைக்குச் சென்று சம்பாதித்தால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவள். கூர்க்கின் காபி எஸ்டேட் மற்றும் ஆரஞ்சுத் தோட்டங்களுக்கு நடுவே நடக்கும் ரசமான காதல் கதை. காதல், மோதல், சுகம், துக்கம் அனைத்து உணர்வுகளும் கலந்த மிக யதார்த்தமான காதல் கதை.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now