Yamuna
அன்பு என்ற பெயரில் ஆண்கள் சிலரால் ஏமாற்றப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு பெண் மரணவாயிலில் நின்று யோசிக்கிறாள்.. நான் ஏன் சாகவேண்டும்..அதே போலியான அன்பை ஆயுதமாய்க் கையில் எடுத்து தன் கண்ணில் விழும் ஆண்களை குறிப்பாக பெண்ணைப் போதைப்பொருளாக நினைக்கும் ஆண்களை அவர்களோடே இருந்து உடல் கலந்தே அவர்களைப் பழி வாங்கும் முடிவோடு வீடு திரும்புகிறாள்..தன் கணவனுக்கும் குழந்தைகளுக்குமான ஒரு வாழ்க்கை.. இந்த ஆண்களை அழிப்பதற்கான ஒரு வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்கிறாள்.. சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவி இவள் நடத்தும் நாடகம் எவ்வாறு முடிவுக்கு வரும்..
வணக்கம்!
நான் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை. தமிழ் என் மூச்சு. அதை கதை மற்றும் கவிதைகளாகிய பொக்கிஷங்கள் எழுதுவதன் மூலம் சுவாசித்து வாழ்கிறேன். எழுத்தில்லையேல் நான் இல்லை. என்றும் தமிழ் பணியில்.