Karthika Rajkumar
எழுத்தை சீராகவும், தொடர்ச்சியாகவும் எழுத ஆரம்பித்த பின் இவருக்கு ஏற்பட்ட இலக்கிய பரிச்சயமுள்ள நண்பர்களின் நட்பும் நிறைய புத்ககங்களும், இவரை நவீன இலக்கியத்தில் வெவ்வேறு அனுபவ விஷயங்களுடன் எழுத்தை தீவிரமாக்கியது. நட்பு, காதல், மனிதம் இவற்றின் அடிப்படை உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவதில் வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனித குமாரர். சக மனித உறவுகள் குறித்த அக்கறையும், இவரின் பெண் பாத்திரங்களும் சற்று வித்தியாசமானவை. வாழ்ந்து கொண்டிருக்கிற மலைப் பிரதேச அநுபவங்களும் அந்த சூழலும் கதைகளில் பரவிக் கிடக்கின்றன. ' வெகு ஜன இதழ்கள் மூலமாவே, எழுத்துலகிற்கு அறிமுகமானவர். இலக்கிய இதழ்களிலும் நிறையவே எழுதி வருகிறார். கவிதைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டுள்ள கார்த்திகா ராஜ்குமார் உதகையிலுள்ள Hindustan Photo Films-ல் Senior Chemist ஆக வேலை.