திருமதி லதா முகுந்தனின் நாவல்கள் இன்றைக்கு எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. இவரது கதை சொல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்துள்ளது.
இப்பொழுது உங்கள் கையில் அவரது 'மனதெல்லாம் மார்கழி.'
பெயரைக் கேட்கும் பொழுதே ஒருவிதக் குளுமை! அதே போல நாவலும் குளுமையான குடும்ப நாவல். படியுங்கள் - படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அடுத்தடுத்து அவரது நூல்கள் வரத் தயாராய் உள்ளன. உங்களின் ஆதரவும் - வரவேற்பும் நிச்சயம் எங்களை உற்சாகப்படுத்தும்.
இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.
இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.
இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
Rent Now