முழுக்க முழுக்க காதல் கதை தான் என்றாலும். துரோகமும் ஏமாற்றமும், பெண்மையும் மென்மையுமான ஒரு பெண்ணை எப்படி பற்சக்கரமாக மாற்றுகிறது என்பதும். பிறகு அதே பற்சக்கரம் எப்படி பாசவிதையாக நேசப்பூவாக மாறுகிறது என்பதே கதையின் சாரம்சம்.
நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..
Free - Read Now