கதையின் நாயகி அர்ச்சனா. எப்பொழுதும் கதை நாயகனை சுற்றியே சுழலும். ஆனால் இந்த கதையை சிறிது வித்தியாசமாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி அமைத்திருக்கிறேன். அதற்காக கதையில் நாயகன் இல்லாமல் இல்லை, கதையின் நாயகன் ஜான் பேட்ரிக்.
அர்ச்சனா... இவளைப் பற்றி சொல்லுவதாக இருந்தால், இவள் விவரமானவளா? வெகுளியா? திறமையானவளா? இல்லை கொஞ்சம் விளையாட்டுத்தனமாவளா? இப்படி நிறைய சந்தேகங்கள் உங்களுக்கு வரலாம். இவை அனைத்திற்கும் விடை கதையில் கிடைக்கும்.
கதைக்களம் கல்வியியல் கல்லூரி (B.Ed college). பொதுவாக கல்லூரிக் கதைகள் என்றாலே அங்கே கேலிக்கும், கிண்டலுக்கும் பஞ்சம் இருக்காது. இந்தக் கதையிலும் அந்த கேலியும் கிண்டலும் சந்தோசமும், படிக்கும் உங்களை தாக்கும் என்று நம்புகிறேன்.
அர்ச்சனாவின் தோழிகளாக வைஷாலி, பெமிலா, ஜுடித் இவர்களும் உடன் பயணிப்பார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது.
இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Abbss
Like
kiran
nice