இது ஒரு அருமையான சமூகவியல் பின்புலத்தில் நடக்கிற காதல் கதை. அபர்ணா சென் வங்க மொழியில் இயக்கிய அற்புதமான திரைக்கதை. அதை தழுவி படைக்கப்பட்ட திரைக்கதையின் நாவல் வடிவம் இது. நாவல் வடிவில் இருப்பதால் இதை அனைவரும் விரும்பி படிக்கலாம். இது நூலாக வெளிவந்தபோது ஏராளமான வாசகவாசகியர்கள் மட்டுமல்ல பல பிரபல படைப்பாளர்களும் படித்து ஏகோபித்து பாராட்டியது இந்த நூலுக்கு கிடைத்திருக்கிற உசத்தியான விருதுகள். அந்த விருதுகள் இந்த நூலை படிக்கிற ஒவ்வொருவரும் நிச்சயம் வழங்குவார்கள் என்கிறது காதலியம்.
திரைக்கதையின் நாவல் வடிவம்
தி. குலசேகர்
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Rent Now