அசிஸ்டெண்ட் கமிஷனர் தீனதயாளுவின் மகள் சம்யுக்தா பிரியமாய் வளர்த்து வந்த ரேம்போ என்னும் நாய்க்கு திடீரென வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோர் எல்லோரையும் தாறுமாறாய்க் கடிக்கின்றது. ஊர் மக்கள் அவர் வீட்டின் முன்னால் வந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்ய, தனது கைத் துப்பாக்கியால் அதைச் சுட்டுக் கொல்கிறார் தீனதயாளு.
அதன் காரணமாய், கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் சம்யுக்தா. தனது போலீஸ் செல்வாக்கை வைத்துத் தேடியும் அவள் இருக்குமிடத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த காரணத்திற்காய் ஒரு ஆளை சுட்டுக் கொல்கிறார் தீனதயாள்.
அந்தச் சாவுக்கு நீதி கேட்க அவர் வீடு தேடி வருகிறாள் சம்யுக்தா....
தீனதயாளுவால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் யார்?
தந்தையும் மகளும் மோதினார்களா...? போன்ற வினாக்களுக்கு கதையும் விடையளிக்கின்றார் கதாசிரியர்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now