உரைநடையாக புனைகதையை எழுதிவரும்போதே கவிதையிலிருந்து சில வரிகளைத் தானாகவே கற்பனை செய்து புனைகதையின் கட்டமைப்பாக அமைத்துத் தருவதுதான் கவிதையாக்கம்.
- சி, கனகசபாபதி,
இலக்கிய விமர்சகர்
முரண்கள் பல நிறைந்த நம் சமூக வாழ்க்கையில் கவிதைகளும் பல்வேறு முரண்களினாடேத் தொடர்கிறது. கால இலக்கியம் என்பது கற்பதற்கும் கற்றதை பரவலாக வெளிப்படுத்துவதற்கும் நிறைய சந்தர்பங்களை உருவாக்கித் தருகிறது. கவிதையென நினைத்து எழுதுவதெல்லாம் கவிதையாகிவிடுவில்லை. எழுதுகிற கவிதைகள் அனைத்தும் சமூகத்தின் சாட்சியாய் நிற்பதுவுமில்லை. நவீனமோ மரபோ எல்லாவற்றையும் ஓர் அலகீட்டு வாய்ப்பாட்டுடன் கையாள வேண்டியுள்ளது.
சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், என எழுதியவனுக்கு, எப்படிக் கவிதைகள் பிடிபட்டது என்பது ஒரு சோக அனுபவந்தான். பல சக்கர வண்டியோட்டிக்கு இரு சக்கர வண்டியோட்டுதல் என்பது முடியாத ஒன்றல்ல; முடியும். அதற்கானத் தகுதியும் முயற்சியும் கலைஞனுக்குத் தேவையாய் இருக்கிறது.
கவிதைகள் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் பிடிபடுவதில்லை. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கினைப் போல ஒரு நல்ல கவிதை அமைய தேர்ந்த மனநிலையும் அது சார்ந்த சூழலும் ஒருங்கே அமையவேண்டும் என்பதுதான் முக்கியமாகப்படுகிறது. கவிதை தளத்தைப் பொருத்தவரையில் என்னைக் கவிதைக்கும் கவிதைக்கு என்னையும் பிடித்திருக்கிறது என்றும் சொல்லலாம். ஒரு பெரும் காப்பியத்திற்குள் அடக்க வேண்டிய விசயங்களை தைரியமாய் ஓர் சிறு கவிதையில் முன்மொழிந்து விடலாம் என்கிற தைரியந்தான் பலவிதமான சமூகக் கருத்துக்களை உள்வாங்கும்போது அனுபவமாகவும் படிப்பினையாகவும் உணர நேரிடுகிறது.
அந்த வகையில் தொடர்கிற என் கவிதைப் பயணத்தில் 'கனவுகள் விரியும்', 'எவரும் அறியாத நாம்' ஆசிய இரு கவிதைத் தொகுப்புக்களைத் தொடர்ந்து 'முரண்தடை' மூன்றாவது கவிதை நூலாகும். 1980களில் தொடங்கிய என் கவிதைப் பயணம் தொடக்க காலத்திற்கும் தற்காலத்திற்கு மாசு ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாட்டில் ஏராளமான வித்தியாசங்களைக் காணமுடிகிறது. அது கவிதையின் வெற்றியாகக் கூட இருக்கிறதெனச் சொல்ல முடியும். இத்தொகுப்பிற்கு உதவிய அனைத்து நல் இதயங்களுக்கும் வாசித்துப் பேசப்போகும் உங்களுக்கும் எனது நன்றிகளை பலமாய் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
- விழி.பா.இதயவேந்தன்.
விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.
சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:
விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.
அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
- பேராசிரியர் பழ மலாய்
Rent Now