K. Jeevabharathy
இந்த மண்ணில் தோன்றி இந்தச் சமூகத்திற்காக உழைத்துச் சிறந்தவர்கள் மறைந்தபோதும், அத்தகைய மனிதர்கள் மறைந்த நாட்களின் போதும் கவிஞர் கே. ஜீவபாரதி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
அரிய செய்திகளை பக்கத்திற்குப் பக்கம் இந்த நூலில் கவிஞர் கே. ஜீவபாரதி பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் மறைந்த போது ‘ஜனசக்தி' நாளிதழில் கவிஞர் கே. ஜீவபாரதி எழுதியிருக்கும் கட்டுரைகள் இந்த தேசத்தை நேசிப்பவர்களும், புதுமையை விரும்புபவர்களும் படிக்கவேண்டிய கட்டுரைகளாகும்.