பெண்ணைப் பெற்றவர்கள் தன் மகள் சிறப்பாக வாழவேண்டும் என்ற கனவுகளோடு தான் மகளை சீர்வரிசைகள் தந்து திருமணம் செய்கிறார்கள்.
வாழ போன மகள்... எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் உலக வாழ்க்கையை விட்டு பிரிந்தாள் என்பது எவ்வளவு பெரிய துயரம்.
அக்காவின் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரன் அக்காவின் மரணத்துக்காக காரணத்தைத் தேடும்போது அறிந்துகொள்ளும் உண்மைகள்...
உயிரோட்டமாக ‘ஞாபகங்கள் தீ மூட்டும்’ என்ற நாவலில் வலம் வருகிறது கதையை படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
- பரிமளா ராஜேந்திரன்
அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..
எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.
இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.
பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.
150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.
Rent Now