என் பெயர் கீதா மதிவாணன். பிறந்து வளர்ந்த ஊர் பொன்மலை, திருச்சி. திருமணத்துக்குப் பின் சென்னையில் சில வருடங்கள் வசித்த பின் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறேன். கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகிறேன். மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர், அக்ரி டாக்டர், பூவுலகு போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, நிலாச்சாரல், அதீதம், பதிவுகள் போன்ற இணைய இதழ்களிலும் என்னுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பான ‘என்றாவது ஒரு நாள்’ என்னும் என் சிறுகதைத் தொகுப்பு அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் நான் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பறவை கூர்நோக்கலும் இயற்கைசார் புகைப்படங்கள் எடுத்தலும் பொழுதுபோக்குகள்.
Rent Now ஞா.கலையரசி
ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியர்கள் அங்கிருந்த பூர்வகுடிகளை அடக்கி ஒடுக்கி, அம்மண்ணை ஆக்ரமித்ததோடு, அயல்மண்ணின் உயிரினங்களையும், தாவரங்களையும் அறிமுகப்படுத்தினர். அதனால் ஏற்பட்ட ஆஸ்திரேலிய உயிரினங்களின் பாதிப்பு, உயிரியல் சமன்பாட்டின் சீர்குலைவு ஆகியவற்றை வெகு சுவாரசியமாய் விளக்கும் கட்டுரைகள். இயற்கையில் நாட்டமுள்ள அனைவரும், அவசியம் படிக்க வேண்டிய நூலிது. ஆசிரியருக்குப் பாராட்டுகள்!