இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்னால் தன் மனைவியையும், இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையையும் பரிதவிக்க விட்டுவிட்டு சிங்கப்பூருக்குப் பிழைக்கச் சென்ற வெள்ளிங்கிரி, தான் திரும்பி வருவதாக தகவல் அனுப்ப,
மூத்த மகள் சரசு, இளைய மகள் திலகா, மற்றும் தியாகராஜன் மூவரும் ஒரு தீர்மானம் செய்கின்றனர். “வரப்போகும் தந்தையை யாரும் சந்திக்கப் போவதில்லை, சந்தித்தாலும் பேசப் போவதில்லை, பேசினாலும் அடைக்கலம் தரப் போவதில்லை” என்று.
தியாகராஜன் மனைவி செல்வி மட்டும், சிங்கப்பூரிலிருந்து வரும் தன் மாமனார் நிறைய சம்பாதித்துக் கொண்டு வருவார், அவை மொத்தத்தையும் தாங்களே அபகரித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் வெள்ளிங்கிரியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.
சிங்கப்பூரிலிருந்து வரும் சொத்து…நேர் வழியில் வந்த சொத்தா?
அதை தியாகராஜனால் அனுபவிக்க முடிந்ததா?
நாவலை முழுமையாகப் படியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now