Lakshmi Subramaniam
காவேரி என்னும் புனிதநதி பிறக்கும் இடத்தைத் தரிசித்துவிட்டு வந்துவிடவேண்டும் என்ற ஆவல் எங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. "தை பிறந்தால் வழிபிறக்கும்" என்பார்கள். அதைப்போல தை மாதம் பிறந்ததும் தான் எங்களுக்குக் காவேரி நதி உற்பத்தியாகும் தலத்தைப் பார்க்கும் வழியும் தெரிந்தது! பொங்கலை ஒட்டி இந்தப் புனித தரிசனத்துக்கு எங்களைத் தயார் செய்துகொண்டு போனோம்.
காவேரி அப்படி ஒரு தனி அழகுடன் கரைக்குக்கரை விம்மிப் பூரித்து, கவிதை
நடையுடன் அசைந்து வருவது தான். அந்த அழகை இன்று முழுமையுடன் பார்க்க வேண்டும் என்றால் வாருங்கள் படிக்கலாம் பொன்னி நதிக்கரையில் ஒரு புனித யாத்திரை...
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.