கிராமத்து இளைஞன் ராஜதுரை, தன் சின்ன வயசு தோழியும், முதலாளியின் மகளுமான தேன்மொழியை நேசிக்கிறான்.
காதலை வெளிப்படுத்த அந்தஸ்தும் அவனுடைய தாயும் குறுக்கிட, மனசுக்குள் புதைத்துக் கொள்கிறான். தேன்மொழியை ஒரு இளைஞனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பதை அறிந்ததும் அதை நிறுத்த வழியின்றி தவிக்கிறான்.
கல்யாணம் முடிந்ததுமே தன் கணவனின் கெட்ட நடத்தையை அறிந்த தேன்மொழி அவனைத்தூக்கி எறிந்துவிட்டு பிறந்த வீட்டுக்கே வந்துவிடுகிறான்.
பெற்றோர்களால் ஒதுக்கப்பட்ட தேன்மொழியை மேற்படிப்பில் சேர்த்து உயர்ந்த இடத்திற்கு கூட்டிச் செல்கிற ராஜதுரை, கடைசிவரை தன் காதலை அவளிடம் சொன்னானா?
நட்பா? காதலா?
பூக்களிலும் தீப்பிடிக்கும்... வாசித்துப் பாருங்கள்.
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்