அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு, ஜெய்சக்தியின் அன்பார்ந்த வணக்கங்கள். “புள்ளிகளும் கோடும்” என்பது எனது இரண்டாவது சிறுகதை தொகுதி. “புள்ளிகளும் கோடும்”, கதை மாலைமுரசுப் பத்திரிகையில் வெளி வந்தது. "அன்பெனும் வலைக்குள்” “பூமராங்” “காயங்கள்” ஆகிய கதைகள் "ஓம்சக்தி” பத்திரிகையில் வெளி வந்தவை. “நீ நீயாக” என்ற கதை “நான் பூ... நீ தென்றல்...” என்ற தலைப்பில் "பெண்ணே நீ” பொங்கல் மலரில் வெளி வந்தது. “மேஜை விளக்கு” “மல்லிகை மகள்” பத்திரிகையில் வெளிவந்தது. மற்ற கதைகள் அவ்வப்போது நான் எழுதி ஒரு பக்கம் வைத்திருந்தவை. இவை இப்போது உங்கள் முன் படைக்கப்படுகின்றன. படித்து ருசித்து கருத்துக் கொடுங்கள். என்றும் உங்கள் நன்றிக்கு அன்பு செலுத்துகிறேன். அன்புடன், ஜெய்சக்தி
Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Rent Now