Yamuna
ஒருத்தி மீது தன் பன்னிரண்டு வயதில் தொடங்கிய பிஞ்சுக் காதல். அது இருபது ஆனதும் முற்றி முளைவிட்டபோது அவளிடம் வெளிப்படுத்தும் நேரம் அவளுக்கு இன்னொருவன் மீது இருந்த காதலால் மறுத்துவிட சிறுவயதிலிருந்து அவளும் அதுவரைத் தன்னைத்தான் விரும்பினாள் என்ற எண்ணம் சுக்கு நூறாக்கப்பட்டதால் தற்கொலை செய்தவனை அதே காதலியே உயிர்மீட்டுக் கொண்டு வருகிறாள். தன் காதலுக்கு கல்லறை கட்டிவிட்டு அவனை வாழ வைக்கலாம் என்ற தருணத்தில் விதி வேறொரு காதல் தோல்வியடைந்தவனிடம் இவளைக் கொண்டு சேர்க்கிறது. அவனுடனும் வாழமுடியாமல் தன்னவனையும் மறக்க முடியாமல் தன்னை உயிராய் உலகமாய் நினைத்தவனையும் சாவுக்கு மீட்கப் போராடும் ஒரு இளம்பெண்ணின் வலி நிறைந்த கண்ணீர் கதை இது. உண்மையுடன் சேர்ந்த கதை. வலியுடன். உங்கள் யமுனா.
வணக்கம்!
நான் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை. தமிழ் என் மூச்சு. அதை கதை மற்றும் கவிதைகளாகிய பொக்கிஷங்கள் எழுதுவதன் மூலம் சுவாசித்து வாழ்கிறேன். எழுத்தில்லையேல் நான் இல்லை. என்றும் தமிழ் பணியில்.