இந்தியா-பாகிஸ்தான் தேசப்பிரிவினையை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட உணர்வுப்பூர்வமான நாவல் இது.
கமாண்டோ பயிற்சி முடித்து யாஸ்மின் தாத்தா அப்துல்லா இருக்கும் மதுரை திரும்புகிறாள். ஊரே வரவேற்கிறது. யாஸ்மினுடன் கராச்சி பெண்மணி ஷெகனாஸ் முகநூல் நட்பு கொள்கிறாள். பிளாஷ்பேக். அப்துல்லாவும் வஹாப்பும் சகோதரர்கள். 1947 தேசபிரிவினையின் போது அப்துல்லா இந்தியாவிலேயே தங்கிவிட வஹாப் பாகிஸ்தான் போகிறான். அப்துல்லாவின் பேத்தி யாஸ்மின். வஹாப்பின் பேத்தி ஷெகனான்ஸ். ஷெகனான்ஸ் திருமணமானவள். கணவன் பாகிஸ்தானின் உளவுபிரிவில் பணிபுரிகிறான். அவளின் மகன் அஷ்ரப். இம்ரான் ஷெகனான்ஸ்-யாஸ்மின் முகநூல் நட்பு அறிந்து அவளை விவாகரத்து செய்கிறான். ஷெகனாஸ் மகன் அஷ்ரப்புடன் இந்தியா தப்பி வருகிறாள். வழியில் ஷெகனாஸ் இறக்க அஷ்ரப் இந்திய கரை ஒதுங்குகிறான். அஷ்ரப்பை பாக் உளவாளி என இந்தியா கருதுகிறது. யாஸ்மின் மாபெரும் சட்ட போராட்டங்களை நடத்தி அஷ்ரப்பை மீட்டு எடுக்கிறாள். இறுதியில் தாய்மை வெல்கிறது. தேசங்களை தாண்டி மதங்களை தாண்டி ஒரு கன்னிதாய் ஜெயிக்கிறாள்.
திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.