ஒவ்வொரு வாரமும் இதுதான் நாம் எழுதும் கடைசிக் கட்டுரை. இனிமேல் எழுதுவதற்கு விஷயமும் கிடைக்காது. உடம்பும் ஒத்துழைக்காது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால் நான் சும்மா இருந்தாலும் என் பேனா சும்மா இருப்பதில்லை. கட்டுரை அனுப்ப வேண்டிய கிழமைக்கு இரண்டு நாள் முன்னதாக அது கூத்தாட்டம் போடத் தொடங்கும். ஏதாவது ஒரு விஷயம் கிடைத்து, எப்படியோ எழுதி விடுவேன்.
பிறகுதான் என் பேனா ஆட்டத்தை நிறுத்தும். அதனால் தான் 'சும்மா இருக்காத பேனா' என்று இந்தத் தொகுப்புக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன். எழுதியவற்றில் நல்லதென்று எனக்குத் தோன்றும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தனிப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளேன். இதுவரை ஐந்து தொகுப்பு வந்திருக்கின்றன. இது ஆறாவது தொகுப்பு.
- ரா.கி. ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா
Rent Now