Lakshmi Subramaniam
சிறுவர் சிறுமியர்களுக்கு எப்போதுமே வேடிக்கைக் கதைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம்.அதை ஓர் அரிய வாய்ப்பாகக் கொண்டு அந்தக் கதைகளில் சில நீதிகளை உணர்த்துவதன் மூலம் அவை அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் பசுமரத்தாணியைப் போல் பதியும் என்பதுடன் அவர்களின் எதிர்காலத்திலும் அவர்களுக்கு நல்வழியைக் காட்டும் வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் அன்பிற்குரிய எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் எளிய நடையில் இனிய முறையில் எழுதியுள்ள 35 சிறிய சிறுகதைகளைக் கொண்டு இந்நூலை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.
மாணவ உள்ளங்களுக்குப் பயன்படும் நூல் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.