தொடுவானம் தன் அத்தை மகனை காதலிக்கும் இளமதி தாயாரின் கட்டாயத்தினால் மளிகை கடைக்காரன் ஒருவனை மணக்க நேர்கிறது.
கடமைக்காக வாழ்ந்து இரு குழந்தைகளுக்கு தாய் ஆகிறாள்.
அவளது தங்கை சுவாதிக்கும் அதுபோல கட்டாய திருமணத்தை அவளது தாய் செய்து வைக்க நினைக்கும் போது அதை தடுக்க அவளைக் காதலித்த அத்தை மகனிடமே அவளது தங்கையை அழைத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ளும்படி யாசகம் கேட்கிறாள்.
வாழ்க்கை யாரையும் வஞ்சித்ததே இல்லை தொடுவானம் என்பதை தொட்டு விடும் தூரம் தான் என்பதை வலியுறுத்தும் கதை இது.
அவளது வேண்டுகோளுக்காக அவளது தங்கையை அழைத்துக்கொண்டு போய் திருமணம் செய்துகொள்ளும் அவளது அத்தை மகனின் மனது அவளது தந்கையின் வசம் திரும்புகிறது. தொடுவானமாக இளமதிக்கும் அவளது அத்தை மகனுக்கும் இருந்த வாழ்க்கை வசப்படுகிறது. இளமதி காலம் கடந்து தன் கணவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.
15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.
Rent Now