Mukil Dinakaran
உத்தரப் பிரதேசம், ஃபைஸாபாத் ரயில் நிலையத்திலிருந்து தமிழ் நாடு நோக்கி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் அவன், வழியில் கோரக்பூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் மத வெறியர்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட, உயிர் காக்க இறங்கி ஓடி ஒளிகிறான்.
அப்போது அவன் கண்ணெதிரில் அவன் மதத்தைச் சேர்ந்த பல பெண்மணிகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் நெருப்புக்குள் தூக்கிப் போட்டு எரிப்பதை நேரில் பார்த்துப் பொங்குகிறான்.
அதுநாள் வரையில் அவனுக்குள்ளிருந்த கனல் எரியத் துவங்குகிறது. என் மதப் பெண்களைக் கொன்ற அந்த மதத்து ஆட்களில் குறைந்த பட்சம் இரண்டு பேரையாவது கொன்றே தீருவது என சங்கல்பம் கொள்கிறான்.
மாற்று ரயிலைப் பிடித்து சொந்த ஊருக்கு வரும் வழியிலேயே தன் வீட்டருகில் இருக்கும் அந்த இரண்டு முஸ்லீம்களை கொன்று தன் வெறியைத் தணித்துக் கொள்ளத் தீர்மானிக்கிறான்.
ஆனால், ஊருக்கு வந்த அவனால்…அவர்களை நேரில் சந்தித்தும் எதுவும் செய்ய இயலாமல் போகிறது…
ஏன்?
கதைக்குள் செல்லுங்கள்…கருத்துக்களைப் படியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.