Dr. R. Prabakaran
உயிரைமீட்ட உன்னத எண் என்ற தலைப்பை படிக்கும் போதே, அதனை படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இக்கதையில் வரும் கண்ணை கவரும் வண்ணப்படங்கள் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. கதையை படிக்கும் போது நாம் ஒரு கணித மாறிலி யின் மதிப்பை கண்டறியப்போகிறோம் என்பதையே மறந்து விடுமளவுக்கு கதை சுவாரசியமாக உள்ளது. மொழிநடையும், கதைப் பாத்திரங்களை அறிமுக படுத்தும் விதமும் அருமையாகவுள்ளது .கதைப்பாத்திரங்கள் கணிதப்பெயர்களை தாங்கி இருப்பது புதுமையாகவுள்ளது.
கணித பாடங்களை ஆசிரியர்கள் இதுபோன்ற கதையாக நடத்தும் போது கணித பாடங்கள் வாழ்வின் கடைசிவரை மறக்காது, அது மட்டுமல்லாது எதையும் புரிந்து படிக்கும் போது அதனை மற்ற வகையில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
பதறாமல் நாம் ஒரு காரியத்தினை அணுகும் போது சிறப்பாக செய்து முடிக்கலாம் என்ற வாழ்வியல் உண்மையை ஆசிரியர் நிரூபித்துள்ளார்.
இதுபோன்ற கணித உண்மைகளை வாழ்வியல் உண்மையோடு சேர்த்து தாய்மொழியில் நிறைய புத்தகங்களை நண்பர் கணித்தாச்சாரியார். முனைவர்.ரா.பிரபாகரன் அவர்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முனைவர் .கே .இந்திராணி
SSUN மாநில தலைவர், தமிழ்நாடு
முனைவர்.இரா. பிரபாகரன் அவர்கள் கோவை தொழில் நுட்பக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராகவும் பணி புரிந்து வருகிறார்.
கணிதத்தினை கதைகள் மூலம் நடத்துவதில் வல்லவர்.சிறந்த இந்தியன் விருது, மனிதநேய மாமணி விருது, சுவாமி விவேகானந்தர் விருது,கவிதென்றல் என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் பல்கலைக் கழகமானியக் குழுவிடமிருந்து நிதியுதவி பெற்று கணிதவியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பண்டைய தமிழர்களின் கணித திறன்கள், இந்தியர்களின் புராணங்களில் புதைத்துள்ள கணித புதையல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் பொறியியல் கல்வி அமல்படுத்துவதில், இந்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் சார்பில் அண்ணா பல்கலை கழக பொறியியல் கணிதம் இரண்டாம் பருவத்திற்காக மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் கணித நூல்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து தமிழினை ஒரு அறிவியல் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பு இயக்கத்தினை நடத்தி வருகின்றார்.
தமிழ் வழி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதவியல் கருத்துக்களை கொண்டுசேர்க்கும் பொருட்டு கணிதவாணி என்னும் மாத இதழினை நடத்திவருகிறார்.