தற்கொலை எண்ணங்களால் தூண்டப்படும் ஆதிரா என்ற நாயகி.
அவளை அஸ்வின் என்ற நாயகன் ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.
ஆதிராவின் வாழ்க்கையில் நடந்தது என்ன? அஸ்வின் அவளை எங்கே எவ்வாறு சந்தித்தான்?
அஸ்வின்-ஆதிரா காதல் காட்சிகள் மனதை வருடுபவை. இருவரின் வாழ்வில் நடந்த சங்கடங்கள் இயற்கையாகவே அவர்களுக்குள் அன்பு என்னும் ஊற்றை வளர்க்க, மற்றவை கதையில்..!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now