ஒவ்வொரு குடும்பத்திலும் இவனைப் போல கதாபாத்திரங்களை நாம் அன்றாட வாழ்வில் பார்க்க முடியும். இவன் ஹீரோவா, வில்லனா என்று கேட்டால் எதையும் அப்படி சொல்லிவிட முடியாது. இவனுக்கு தான் தன் சுகம் மட்டுமே முக்கியம். நான்கு பேர் கூடி பேசினாலே வயிறு பற்றி எரியும் இவனுக்கு தான் மட்டுமே அனைவருக்கும் உறவு பாலமாக இருப்பதாக சொல்லும் குணம் உண்டு. தாய், தந்தை, கட்டிய மனைவி, உடன் பிறப்புகள் எவர் மீதும் உண்மையான அக்கறை இருக்காது. சுயநலமே இவனது தாரக மந்திரம்.
சுதா ரவி என்கிற புனை பெயரில் கடந்த ஆறு ஆண்டுகளாக எழுத்துப் பயணத்தில் இருக்கும் இவர் பதினொரு நெடுங்கதைகளும், பதிமூன்று குறுநாவல்களும், முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். இவரின் சிறு கதைகளும், கட்டுரைகளும் ராணி இதழில் வெளி வந்திருக்கின்றது.
பதினொரு நெடுங்கதைகளும் , பதிமூன்று குறுநாவல்களும் புத்தகமாக வெளி வந்திருக்கின்றது. இவரின் கதைகளில் குடும்ப சூழல்களில் ஏற்படும் உறவுச் சிக்கல்களும், சமூகத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும். இவரின் கதைகள் பல்வேறு தரப்பட்ட ஜானர்களில் எழுதப்பட்டிருக்கும். நகைச்சுவை, திகில், மர்மம், குடும்பம் என்று அனைத்து வகையிலும் எழுதி இருக்கின்றார்.
இவரின் கதைக்கரு நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளை பேசி இருக்கும். இவரை உங்களுக்கு முன்பே அறிமுகமாகி இருந்தாலும், புஸ்தகாவில் இணைவதன் மூலம் உங்களை மகிழ்ச்சியோடு தனது படைப்புகளின் மூலம் சந்திக்க வருகிறார்.அவரின் படைப்புகளை பற்றி குறிப்பிட விரும்பினால் sudharavi0172@gmail.com என்கிற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Rent Now