அவன் பாலாஜி. உறவுகளாலும். நட்புகளாலும் பலவகைகளில் பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவை எடுக்கிறான். ஆனால், கடைசி விநாடியில் ஏதோவொரு நிகழ்வு அவன் தற்கொலையைத் தடுத்து விட, புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அந்த முயற்சி தொடர்ந்து அவனுக்கு வெற்றிகளைத் தர, வாழ்க்கையில் உயருகிறான். சமூகத்தில் பெரும்புள்ளியாகிறான்.
ஆரம்ப காலகட்டங்களில் அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், அவனிடம் வந்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கின்றனர், மனம் கோணாமல் அவர்களை ஏற்றுக் கொண்டு உதவுகிறான்.
தான் நொந்து போன காலத்தில் தனக்கு ஆறுதலாய் இருந்த குடும்பத்திற்கு உதவுகிறான்.
வாழ்க்கையில் நல்ல நேரம் என்பது மனிதனுக்கு கடைசி விநாடியில் கூட வரும், என்பதை உணர்த்தும் நேர்மறையான இந்தக் கதை நிச்சயம் வாசக நெஞ்சங்களில் நீங்கா இடம் பெறும் என்பது உறுதி.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now